சிவாஜியை எதிர்க்கிறார் புவனேஷ்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எம்.கே.சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,

அரசியல் என்பது கட்சி மற்றும் மக்களின் நன்மை சார்ந்து இருக்க வேண்டும். இந்த விடயத்தில் சாதிக்க முடியுமா, அல்லது நன்மை அடைய முடியுமா என்ற கேள்வியுடனே அவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருப்பதை நான் பார்க்கிறேன்.

இதன் காரணமாக தமிழ் மக்களின் வாக்குகள் பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். எனவே அவர் இந்த போட்டியிலிருந்து விலகி தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் - என்றார்.

No comments