சஜித்தின் கீழும் பிரதமர் நானே - பிரதமர்


ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்ற பின்னரும் தாமே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச புதிய பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக நியமிக்க போவதில்லையென்றும் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதம் தனது பதவி குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments