தேர்தல் பிரச்சாரத்தில் மட்டக்களப்பு அரச ஊழியர்கள்

தேர்தல் முறைப்பாடு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 5 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் முறைப்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளரினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்ற முறைப்பாட்டுப்பிரிவில் தற்போதுவரை ஐந்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் அரசாங்க அலுவலர்கள் அரசாங்க பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான முறைப்பாடுகளுடன், பொருட்கள் விநியோகம், சட்ட விரோத காட்சிப்படுத்தல், ஊடகங்களில் ஒரு கட்சிசார் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும், வைத்தியசாலை ஊழியர்கள் கடமை நேரங்களில் நோயாளிகளுக்களுக்கு தேர்தல் பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments