வீதி விதிமீறல் சிட்டையை மூன்று மொழியில் வழங்க நடவடிக்கை

வீதி பயணத்தின் போது விதி மீறல்களுக்காக வழங்கப்படும் தண்டனைச் சீட்டை இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில், குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச் சீட்டு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த தண்டனைச் சீட்டில் தண்டனைகள் என்ன என்பது தொடர்பாக சிங்கள மொழியில் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன.

வடக்கு மகாண ஆளுநரிடம்,  தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய ஆளுநர்,  ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, குறித்த தண்டனைச் சீட்டில் மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பாக குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தண்டனைச் சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப் பட்டியலில் இலகுவில் அறிந்து கொள்ளமுடியும்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினைத் தொடர்ந்தே இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments