மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் - கனடா

மாவீரர்களின் பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும் நாள், எதிர் வரும் 24. 11. 2019 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, மதியம் 2.00 மணி வரை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அனைவருக்கும் அறியத் தருகின்றது.

மாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகை தந்து, அன்று, நடை பெறும் நினைவேந்தலில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துமாறு, கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் உணர்வாளர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.
வணக்கம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்
தொடர்பு இலக்கம். (647) 619 3619.

மண்டப முகவரி.
Metropolition  Centre,
3840 Finch Ave. E
M1T  3T4.     

No comments