நெடுங்கேணியில் புதையல்:இருவர் கைது?


நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments