பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர்கள் ரிஐடியிடம்


அம்பாறையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.

No comments