இலங்கைக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தலாம்

இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல முதல் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து மறு மதிப்பீடு செய்ய இலங்கை அரசின் உதவியை இலங்கை கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

விளையாட்டத்துறை அமைச்சு மூலம் பிரதமர் அலுவலகத்தால் இன்று (11) விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடக்கச் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்ததாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

No comments