அநுராதபுரம் சிறையில் பிள்ளையார் ஆலயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு பிரத்தியேகமாக அமைந்துள்ள இடத்தில் புதிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டு திறப்பு விழா சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹன கலப்பதி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகச் சிவன் அறக்கட்டளை இயக்குநரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகமுமான கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் பிரதான சிறைக்காவலர் சமன்த தசாநாயக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பருத்தித்துறை ஆலடிப் பிள்ளையார் கோவில் சசிகுமார் குருக்கள் மற்றும் யாக்கருப் பிள்ளையார் குரு உதய சங்கர் ஆகியோர் விசேட சமய வழிபாடுகளை நடத்தி வைத்தனர். 
இந்நிலையில் இறுதியில் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது. 

No comments