கோத்தாவை கைது செய்ய அனுமதி மறுத்தது நீதிமன்றம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக இருந்த கோத்தாபய சுற்றுலா விசாவில் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே கைது செய்ய நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டது.

எனினும் இதுவிடயத்தில் போதுமானளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டுமென கூறி சிஐடியின் கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

No comments