விஜய்க்கு போட்டால் வாழ்த்து, எங்களுக்கு போட்டால் நன்றி; சீமானின் கற்பனைக் கணக்கு!

நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் நாம்தமிழர் கட்சி சீமான் நடிகர் ரஜினியின் அரசியல் களத்துக்கு எதிராக நிறுத்த நினைத்து வருவது அதை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் ஊடகவியலாளர் மத்தியில் பேசிய சீமான்.. 

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறோம். ஏனெனில் ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விஜய்க்கும் எங்களுக்கும் ரத்த உறவு இருக்கிறது. அவன் என் இனம் சார்ந்தவன். அதனால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய அவர் அரசியலுக்கு வரலாம். அப்படி வந்து மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களித்தால் வாழ்த்துவேன். எங்களுக்கு வாக்களித்தால் நன்றி சொல்வேன். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு, “முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத நாடு முன்னேறாது. விவசாயத்தை கைவிட்டு தொழில் வளர்ச்சி பற்றி பேசுவது ஆபத்தில்தான் முடிவடையும்” என்று எச்சரித்தவர், பொருளாதார வீழ்ச்சி தான் மத்திய அரசின் நூறுநாள் சாதனையாக உள்ளது எனவும் விமர்சித்தார்.

No comments