தளராத உறுதியுடன் எழுக தமிழராய் பேரெழுச்சிகொள்க! புரட்சித்தமிழன் சத்தியராச் அழைப்பு!

தளராத உறுதியுடன் யாழ் முற்றவெளி நோக்கிய எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று பேரெழுச்சிகொள்க என உங்களுள் ஒருவனாக கேட்டுக்கொள்வதாக தமிழ்த் திரைப்பட நடிகர் புரட்சித் தமிழன் சத்தியராச் விடுத்துள்ள காணொளிப் பதிவின் ஊடாக அழைபுவிடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

யாழ் முற்றவெளியில் வரும் திங்கட்கிழமை 16 ஆம் திகதி தமிழினப் படுகொலைக்கு சர்வதேச அரங்கில் நீதி கேட்டு மிகப்பெரும் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் உறவுகள் இதில் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவுக் கரத்தினை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. நாம் தளர்ந்துவிடாது போரடிக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட போராட்டாமாகவே யாழ் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்படவிருக்கிறது. இவ் எழுக தமிழ் நிகழ்வில் தளராத உறுதியுடன் எழுக தமிழராய் பேரெழுச்சி கொள்ளும் வகையில் ஆதரவுக்கரம் நீட்டுமாறு உங்களுள் ஒருவனாக கேட்டுக்கொள்கின்றேன் என எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள காணொளிப்பதிவில் புரட்சித் தமிழன் சத்தியராச் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments