அகப்பட்டது 7கிலோ தங்கம்?

ராமேஸ்வரம்  அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திச் செல்லப்பட்ட 4   கோடி மதிப்பிலான  7 கிலோ கடத்தல்  தங்கம் பறிமுதல் கடத்தல் குறித்து ஏழு பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து  வேதாளை கடற்கரைபப்குதிக்கு தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக உளவு துறை அதிகாரிகளுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து  மன்னார் வளைகுடா கடல் பகுதியல் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை,மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரகாவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர்  இந் நிலையில் மண்டபம் அடுத்த  வேதாளை  கடற்கரைப்; பகுதியில் இருந்து வேகமாக சென்ற  வாகனத்தை  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மத்திய வருவாய் புலணாய்வு துறை மடக்கிபிடித்தனர் அப்போது சென்னை புதுப்பேட்டை, மதுரை கே.கே நகர் மற்றும் வேதாளை பகுதியை சேர்ந்த ஏழு பேர் சென்ற வாகனத்தை  சந்தேகத்தின் பேரில் சோதணை செய்தனர் அப்போது 7 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கன்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.  

விசாரணையில்  இலங்கையில் இருந்து 7 கிலோ கடத்தல் தங்கம் இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்தது பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 4 கோடி என அதிகாரிகள்; கூறினர் மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல்பிராந்தியத்தில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலிருந்து  தங்கம் கடத்தி வரப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது  உள்ளுர் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ராமநாதபுரம் கடலோப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments