முகமாலையில் மனித வன்கூடு?


கிளிநொச்சி முகமாலை வடக்குப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மீட்புப் பணியின்போது மனித எலும்புகள், எச்சங்கள் சிலவற்றைக் கண்டெத்துள்ளனர். கண்ணிவெடி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் வழமைபோன்று இன்றும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பகல் அளவில் மனி எலும்புகள், எச்சங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர். பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பிற்பகல் அளவில் சம்பவ இடத்துக்கு வந்த இலங்கைப் பொலிஸார் மனிச எச்சங்கள் மீட்க்கப்பட்டமை தொடர்பாகக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் பார்வையிட்டனர்.

No comments