சூடு பிடிக்கும் கூட்டணி விவகாரம்; 3நாட்களில் இறுதி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பில் எதிர்வரும் (17) இறுதி முடிவெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு (13) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டணி விவகாரத்தை கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,

நேற்றிரவு நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழு சனிக்கிழமை கூடவுள்ளது. இதன்போது ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். என்றார்.

No comments