யாழ்.பல்கலை மாணவர்கள் கைது?

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7  சிங்கள மாணவர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றது. பல்கலையில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபடடனர்.

இந்த மோதலினால் சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலையின் விஞ்ஞான பீட த்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் பொலிசார் இந்த மோதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல்கலையின் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 7 சிங்கள மாணவர்களை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். 

No comments