அனல் பறக்கும் வேலூர்,அலைநடுவே சீமான்!

வேலூர் பாரளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக என்ற கட்சிகளுக்கு நடுவே தன்னம்தனியாக களத்தில் சீமானின் நாம்தமிழர் கட்சி தீபலட்சுமி என்ற பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

பணபலம் மூலம் வாக்குகளை சுருட்டிக்கொள்ள திராவிட கட்சிகள் முயன்றுவரும் வேளையில் கொள்கையையும்  தனது தன்னரர்வு தொண்டர்களுடன் முன்னிறுத்தி புலிக்கொடியோடு நடைபோடுகிறார் சீமான்.

அதைவிட பொது அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்வியலாளர்கள் பலரும் இப்போது சீமானுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக தகவல்தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்களே இப்போது தன்னிச்சையாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர்,

கமலகாசன், தினகரன் இந்த தேர்தலை புறக்கணித்ததினால் சீமானுக்கு வாக்குகள் கணிசமான அளவு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இது ஒரு மும்முனைப் போட்டியாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்சியாக பிரச்சார கூட்டங்களை நடத்திவரும் சீமான் நேற்று வேலூர் முள்ளிப்பளையம் எனும் இடத்தில் இருந்து சங்கரன்பாளையம் எனும் இடம் வரைக்கும் பேரணியாக தன்னுடைய தொண்டர்கள் புடைசூழ வந்து எதிர்கட்சிகளை மிரட்டியிருக்கிறார்.

தொடர்ச்சியாக வேலூரிலே முகாமிட்டுள்ள சீமானும் அவரது சகாக்களும் குக்கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments