ஊடகவியல் போர்வையில் அச்சுறுத்தலாம்; எதிர்த்து போராட்டம்

வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் நபர் ஒருவர் ஊடகவியலாளர் என்ற பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருவதாகத் தெரிவித்து அவருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேச மக்களில் சிலரினால் இன்று (26) காலை நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி, அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும் என்ற கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் ஊடக அமைச்சுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் பிரதேச மக்களினால் கையெழுத்து இடப்பட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.  

No comments