நடேசு பிரியா குடும்பத்திற்கு ஆதரவாக போராட்டம்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நடேசலிங்கம் மற்றும் பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த தம்பதிகளின் குழந்தையான தருணிக்கா தன்னை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஏற்கமறுத்த அதிகாரிகள், அதனை அமைச்சரிடம் அனுப்பிவைக்கவும் மறுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களின் நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

No comments