புகுந்த வீட்டுக்கு போவது போன்ற உணர்வு! சந்திரயான்-2 குறித்து சிவன் பெருமிதம்
மணமகள்
தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போவது போல எனக்குள் உணர்வு என்று சந்திரயான்-2 இயக்கதின் பிரதானியும் இஸ்ரோ விண்வெளி தலைவருமான சிவன் தெரிவித்துள்ளார். 28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவது குறித்து அவர் ஊடகவியாலர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்:-
திட்டமிட்டபடியே சந்திரயான் 2 நிலவை நோக்கி முன்னேறியது. முதல் நாளில்
இருந்து இன்று வரை எப்படி திட்டமிடப்பட்டதோ, அப்படியே சந்திரயான் 2 சீரான
முன்னேற்றம் பெற்று வருகிறது. நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு அடுத்தடுத்த
மாற்றங்கள் நிகழும்.
வரும் செப்டம்பர் 2ம் தேதி மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்ரம் லேண்டர் சந்திராயனில் இருந்து பிரியும்.
மணமகள்
தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போவது போல சந்திரயான் 2
பூமியில் இருந்து நிலவுக்கு சென்றுள்ளது. இது பெருமைகுரிய ஒரு நிகழ்வு.
நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி சந்திரயான் 2 தரை இறங்கப்போகிறது.
வரும்
செப்டம்பர் மாதம் 7ம் தேதி, திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில்
சந்திரயான் 2 தரை இறக்கப்படும். இதற்கு உங்கள் அனைவரின் துணையும் அவசியம்.
எங்களுக்கு அது நல்ல எனர்ஜியாக இருக்கும்.
Post a Comment