யாழில் நேற்று இரவு வெட்டு குழு அராஜகம்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று வீட்டின் கதவு ஜன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொருக்கு கோடாரியால் கொத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டள்ளது.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தரது வீட்டிலேயே நேற்று (09) இரவு 9.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

No comments