தாக்குதலுக்கு அஞ்சி லொறிகளுக்கு கடும் பாதுகாப்பு

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் - அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நடமாடும் பாதுகாப்பு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அருவக்காட்டில் குப்பைகளை கொண்டும் செயற்பாட்டுக்கு எதிராக கடந்த சில நாட்களாக குப்பை லொறிகள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments