யுத்தக் குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ தளபதியானார்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (19) சற்றுமுன் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இதுவரை இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்திருத்தது. இந்நிலையில் இன்று புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கான பட்டியலில் முதன்மையான மேஜர் ஜெனரல்களான சத்தியப்பிரிய லியனகே, தர்சன ஹெட்டியாராட்சி, சவேந்திர சில்வா மற்றும் குமுது பெரேரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படு சவசேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சவேந்திர சில்வா யுத்தக் குற்றம்சாட்டப்பட்ட முதன்மையான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments