கொள்கை சரியாயின் இணையலாம்?


தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எழுகதமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வரவேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

எழுகதமிழ் அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. எழுக தமிழ் 2019 கூடியமக்களின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டிய நிகழ்வாக இருக்கின்றது.

அதற்குகாரணம் தற்போதைய காலம் பல விதத்திலும் நாட்டில் ஒருகொந்தளிப்பு நிலைமையை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வேளையில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று கேட்கவேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. ஆகையினால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதேநேரத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற பலரும் பல பிரயத்தனத்தில் தற்போது ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகையினால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுக்கு எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியசந்தரப்பம் சூழ்நிலைபிண்ணணி அதற்கேற்ற போல ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.; 

No comments