தனியான புலனாய்வு பிரிவே வேண்டுமாம்?

அரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர்  மூன்று பேர் கொண்ட  சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று, முன்னிலையாகி சாட்சியமளித்த சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினர்களான, உச்சநீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட, முன்னாள் காவல்துறை மா அதிபர் இலங்ககோன், பத்மசிறி ஜெயமான்ன ஆகியோர், இவ்வாறு கூறினார்.
தமது விசாரணை அறிக்கையில் இதனை ஒரு பரிந்துரையாக முன்வைத்திருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“காவல்துறை, புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் தரப்பிலுள்ள மோசமான குறைபாடுகள், 21/4 தாக்குதலை நடத்தியவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கு வழிவகுத்துள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பணியகம் போன்ற, ஏனைய புலனாய்வு பிரிவுகளைப் போல, அரச புலனாய்வுச் சேவை செயற்படக் கூடாது.

No comments