கனமழை விளைவு, நிலச்சரிவில் சிக்கி 59 பேர் பலி!

மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில்  திடீரென நிலச்சரிவு ஏற்பட்ததனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை உயிருடன் மீட்டனர் எனினும்  59 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments