சாரைசாரையாக படையெடுத்த போராட்டக்காரர்கள் ! வானூர்தி நிலையம் மூடல்!

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை நடத்தும் நோக்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து,
கடந்த ஜூன் மாதம்  தொடக்கி ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் கஈடுபட்டுவரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணி நடத்தியும், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களையும்  முற்றுகையிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்பப்ப காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கலவரங்களும் நடைபெறுகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற  போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் என பல தரப்பினர் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 5 லட்சம் பேர் போராட்டத்தில் பக்குபற்றினார்,
வானூர்தி நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். இதனால் வானூர்தி நிலையம் வழமை பாதிக்கப்பட்டதால் வானூர்தி சேவை முடங்கியது.இதானால் 230 வானூர்திகள் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.





No comments