இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை:இலங்கை நீதிமன்றம் உத்தரவு


கடந்த ஜூலை மாதம் 29ந்  தேதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற எழு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்தாக வழக்கு பதிவு செய்த  இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து  வவுனியா சிறையில் அடைத்தனர்.

இன்று மீனவர்களின் வழக்கை விசாரித்த  மன்னார் நீதிமன்ற நீதிபதி கனேசராஜா மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்திரவிட்டார்.மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் நவம்பர் மாதம் 17ந் தேதி ஆஜராக வேண்டும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கபடும் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மெருஹான முகாமிற்க்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்

கடந்த ஜூலை மாதம் 24ந்  தேதி புதுக்கோட்டை  இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் படகு பழுது காரணமாக தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த மீன்வர்கள் மீது வழக்கு பதிவு செய்த  இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து  யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இன்று மீனவர்களின் வழக்கை விசாரித்த  ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்திரவிட்டார்.மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் அக்டோபர் மாதம் 9ந் தேதி ஆஜராக வேண்டும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கபடும் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மெருஹான முகாமிற்க்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் இலங்கை சிறைகளில் இருந்து 11 மீனவர்கள் விடுதலையான சம்பவம் மீனவ கிராமங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

No comments