பீர் போத்தலில் காந்தியின் படம்!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம் மகாத்மா காந்தியின் புகைப்படைத்துடன் கூடிய பீர் போத்தலை விற்பனைக்காகச் சந்தைப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  மகாத்மா காந்தி படத்தை பீர் போத்தலில் பதித்து மல்கா பீர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசேர்ட் மற்றும் கூலிங் கிளாசுடன் என அவருடைய புகைப்படம் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றது.

இது இந்திய பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியால் எழுப்பப்பட்டது. 

மாநிலங்களவையில் இவ்விவகாரம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது.

இதையடுத்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார். மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments