மலையகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மாணவி ஒருவர் பலி!!


இலங்கையின் மலையகம் அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழைப் பொழிவினால் டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய்யில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால்  அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தேடுதலில் இடுபட்டபோது அதில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு, மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.


No comments