பெண்களே கூட தண்ணி அடிக்கிறனர்:மைத்ரி புதிய கண்டுபிடிப்பு!


விடுதலைப்புலிகள் போதைப'பொருள் வியாபாரம் செய்தார்களென நாளுக்கொரு கதை சொல்லும் மைத்ரி தற்போது பெண்கள் கூடிய அளவில் தண்ணி அடிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments