நவாலியில் மாணவனை வெட்டிய வாள்வெட்டுக் கும்பல்!

யாழ்ப்பாணம், நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.

அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16 வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல் மாணவனை வெட்டிக்காயப்படுத்தியுள்ளது.

தலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments