காய்ச்சல் அபாயம்; 6000 பன்றிகள் கொலை!

ஹாங்காங்கில் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள 4,700 பன்றிகள் கொல்லப்படவிருக்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் ஹாங்காங்கில் நேர்ந்துள்ள இரண்டாவது பன்றிக் காய்ச்சல் சம்பவம் அது.பாதிக்கப்பட்ட பன்றி குவாங்டோங் பண்ணையில் இருந்து வந்ததாகவும், தற்போது சீனத் தலைநிலத்திலிருந்து இறக்குமதிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
கடந்த மாதம் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சல் கிருமித் தொற்றைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6,000 பன்றிகள் ஏற்கனவே கொல்லப்பட்டன.பன்றிக் காய்ச்சல் கிருமி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.

No comments