பூஜித, ஹேமசிறியை கைது செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்க தவறியதாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீது மேலதிக குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாமென உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று அவர்கள் கைது செய்யப்படலாமென சொல்லப்பட்டது.

முன்னதாக பூஜித்த மற்றும் ஹேமசிறி ஆகியோர் இந்த தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments