தேறுகிறார் திருமா! தங்கினார் அன்புமணி!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதிகளான  திருமாவளவன் போட்டியிட்ட  சிதம்பரம் , மற்றும் அன்புமணி போட்டியிட்ட தருமபுரி ஆகிய தொகுதிகள், ஆரம்பத்தில் இருந்தே இழுபறி நிலையில் யார் வெல்வார் என்ற நிலையில் இப்போது தருமபுரி தொகுதியில் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் இருக்கிறார் அன்புமணி ,
மற்றும் சிதம்பரத்த்தில் 9777 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன்  முன்னிலையில் இருக்கிறார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெல்லவேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் விரும்பிக்கொண்டிருக்கிறார்கள், அவர் கடந்த தேர்தல்களிலும் இவ்வாறு சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

No comments