தெற்கில் வெடிப்பு:வடக்கில் கைது?


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள் மற்றும்   தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டுள்ளனா். 
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கட்டிடம் மற்றும் பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் மாணவா் ஒன்றிய கட்டிடம் மற்றும் மாணவா் விடுதி ஆகியவற்றுக்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் படங்கள் மற்றும் சினைப்பா் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்து ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழக
மாணவா் ஒன்றிய தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனா். 

No comments