திருகோணமலையில் வழமை மறுப்புப் போராட்டம்! இயல்பு வாழ்வு பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் நியாயமான ஒரு ஆளுநரை நியமிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலையில் வழமை மறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று திருகோமலையில் முன்னெடுக்கப்பட்ட வழமை மறுப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டது.

பொதுச் சந்தைகள் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் பொதுப் பேருந்து சேவைகள் நிறுதப்பட்டன.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் திறந்த போது சமூகளித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனக் கூறப்பட்டுள்ளது.


No comments