உந்துருளி விபத்து! ஒருவர் பலி!


மட்டக்களப்பில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களுதாவலி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்றிரவு களுவாஞ்சிக்குடி பிள்ளையார் தேதாதீவு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments