சுவிஸ் தூதரக செயலாளர் வடக்கு ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் தமயானியா சிகையிட்டமட்டிக்கும் (Mr. Damiano Sguaitamatti)  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்ற இடம்பெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடந்த சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள தமயானியா மரியாதை நிமித்தம்  ஆளுநரைச் சந்தித்ததாக ஆளுநர் வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments