தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்?


தற்போது ஏற்பட்டுள்ள ஆசாதாரண சூழ்நிலையில் பாடசாலைக்குச் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் சில இடங்களில் பெண் ஆசிரியர்களின் கைப்பைகளும், பெண் பிள்ளைகளின் பைகளும் ஆண்களால் பரிசோதிக்கப்படுகின்றபோது சில சங்கடமான நிலை உருவாவதாக எம்மிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பரிசோதனையின் போது பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதைத் தவிர்க்குமாறு சங்கம் வினயத்துடன் வேண்டிநிற்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள வேண்டுகோளில்…..

பெண்கள் தமது அத்தியாவசிய தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் முற்றாக வெளியில் கொட்டப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. இதைவிட மாணவிகளின் தோழில் வைத்தே பைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டு ஆண்கள் பரிசோதனையில் ஈடுபடுவதால் பலர் முன்னிலையில் சில விடயங்கள் தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக எடுத்துரைத்துள்ளனர்.

இவற்றைத் தவிர்க்க பாடசாலை சோதனை நடவடிக்கைகளில் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொண்டு தேவையற்ற விபரீதங்களையும் தவிர்க்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வினயத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளது

No comments