கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு!


யாழ். கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் இருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்குள்ளப்பட்டது.

இராணுவத்தினர்கடற்படையினர்பொலிஸ்பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவெடிக்கையினைமேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடுகுடியிருப்பாளர்கள்எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனைசெய்யப்பட்டதுஅவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு யாழ்மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதன் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது

No comments