புதிய விமானப் படைத் தளபதி!

சிறீலங்காவின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி கபில ஜயம்பதி ஏயார் சீப் மார்ஷல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments