யாழ் பல்கலையில் படைக் குவிப்பு - தீவிர சோதனை




யாழ்ப்பணம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் சோதனை செய்யப்பட்டது.

அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத் தரப்பினர் உள்நுளைவதற்கு நீண்ட வருடங்களாக தடை உள்ளது. எனினும் நாட்டின் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அரம்பிப்பதற்கு முன்னராக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் மேற்கொள்வதற்காகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

No comments