கொக்குவில் தலையாழி பகுதி சுற்றிவளைப்பு - தேடுதல் நடவடிக்கை


யாழ்.கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில்இருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்குள்ளப்பட்டது.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.



இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிரசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டுவீதியில் இறங்கவோ இராணுவத்தினரால்அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது.

அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.



உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்து நாடுமுழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில்தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

No comments