ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரன் கைது! 9 கத்திகள் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரின் வீட்டில் 9 கத்திகள் இருந்ததால் அவரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் - மல்லியப்பு பிரதேசத்தில்  அமைந்துள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது 9 கத்திகள் காவற்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த வீட்டில் இருந்த சகோதரன் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து மீண்டும் மத்தியகிழக்கு நாடான யேமனில் வசித்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட சகோதரன் ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹட்டன் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments