15600 ஆண்டு பழமையான மனித பாதச்சுவடு கண்டுபிடிப்பிப்பு!

சிலி நாட்டின் தென்பகுதியில் 15,600 ஆண்டுப் பழைமையான பாதச்சுவடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் அதனை முதன்முதலில் Universidad Austral of Chile ஆய்வுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடித்த போதும் அது விலங்கு ஒன்றின் சுவடாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் ஊகித்தனர். பின்னர் அது மனிதனின் பாதச்சுவடு என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.


மேலும் ஆய்வில் இறங்கியுள்ள அவர்கள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தென்அமெரிக்கக் கண்டத்தில் நடமாடியுள்ளனர் என்பதைப் பாதச்சுவடு புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

No comments