தமிழீழ வைப்பகக் காணியை தோண்டி ஏமாந்தது பொலிஸ்



முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தமிழீழ வைப்பகம் அமைந்திருந்ததாக கூறப்படும் இடத்தை பெருமெடுப்பில் தோண்டி தேடுதல் நடாத்திய பொலிஸாா் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனா்.

ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் நிலப்பகுதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகத் தோண்டப்பட்டது.

கனரக இயந்திரம் கொண்டு குறித்த நிலப்பகுதியினை ஆழப்படுத்தி தோண்டியும் எதுவித பொள்களும் அங்கு மீட்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர், பொலிஸார், படையினர்,தொல்பொருள்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் தேடுதல் நடைபெற்றது.

No comments