வருகின்றது நடமாடும் கப்பல் மின்பிறப்பாக்கிகள்!


இலங்கையில் மின்சாரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையடுத்து அவசர அவசரமாக நடமாடும் கப்பல் வழி மின்பிறப்பாக்கிகள் கொழும்பு கொண்டுவரப்பட்டுள்ளது.இலங்கை அரச அமைச்சர் ஒருவரே இலங்கை மின்சாரசபைக்கு மின்விநியோகத்தை மேற்கொள்ள கப்பலில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கிகளை கொண்டுவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும் குறித்த அமைச்சரது பெயர் விபரங்கள் வெளியாகியிருக்கவில்லை.

இதனிடையே கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் முடிவடைந்துள்ள நிலையிலேயே, குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மின்சாரத்தை தடை செய்யும் நேரம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நாடு முழுவதும் சுமார் நான்கு மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments