ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் உயிருடன்! இலங்கைத் தாக்குதல்களுக்குப் பாராட்டு!

இலங்கையில் நடைபெற்ற நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்காதி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பில் கடந்த 5 வருடங்களின் பின்னர் முதல் முதலாக காணொளியில் தோற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்காதி இஸ்லாமிய அரசின் கடைசிப் பகுதியாக இருந்த சிரியாவின் பாகுஸ் பகுதியை இழந்ததிற்கு பழிவாக்கும் முகமாகவே இலங்கையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

18 நிமிடங்கள் உரையாற்றும் காணொளியில் தனது சாகாக்களுடன் உரையாடும் போது இக்கருத்தை வெளியிட்டு பக்காதி எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் அக்காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments