முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு!


யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் முல்லைதீவில் குண்டுவெடிப்புக்கள் ஓயவில்லை.அவ்வகையில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன.10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணியில் இருந்த குண்டுகளே, இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளன.
காணி உரிமையாளரால், காணி துப்புரவு செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டது. இதன்போது காணி நிலத்தில் மறைந்நிருந்த இருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருந்ததால், தெய்வாதீனமாக அவ்விருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

No comments